S. P. Balasubrahmanyam & Latha Kannan - Vaazhum Varai - From "Paadum Vanampadi" Songtexte

Songtexte Vaazhum Varai - From "Paadum Vanampadi" - S. P. Balasubrahmanyam , Latha Kannan




வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு
வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே
வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு
மாடி வீட்டு ஜன்னலும் கூட சட்டை போட்டிருக்கு
சேரிக்குள்ள சின்னப்புள்ள அம்மணமா இருக்கு
மாடி வீட்டு ஜன்னலும் கூட சட்டை போட்டிருக்கு
சேரிக்குள்ள சின்னப்புள்ள அம்மணமா இருக்கு
ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே
ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே
வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு
வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு
ஏழைகள் பாடும் பாடலை கேட்டு என்னது பரிகாசம்
வீதியில் பாடும் பாடல் நாளை ஊரிலே விலை பேசும்
ஏழைகள் பாடும் பாடலை கேட்டு என்னது பரிகாசம்
வீதியில் பாடும் பாடல் நாளை ஊரிலே விலை பேசும்
எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே
எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே
வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே
வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு
வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு...



Autor(en): BAPPI LAHIRI, R VAIRAMUTHU



Attention! Feel free to leave feedback.