Hariharan - Eatho Oru Paatu текст песни

Текст песни Eatho Oru Paatu - Hariharan




ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே
உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே
உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும்
ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீ மூட்டும்
ஞாபகங்கள் நீரூற்றும்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
கேட்கும் இசையெல்லாம்
நீ பேசும் ஞாபகமே
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால்
முகப்பரு ஞாபகமே
அதிர்ஷடம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே
தொட்டால் சிணுங்கி பார்த்தால்
உந்தன் வெட்கம் ஞாபகமே
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
மறந்து போனதே எனக்கு எந்தன் ஞாபகம்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம்
உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே
உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே
உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும்
ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீ மூட்டும்
ஞாபகங்கள் நீரூற்றும்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம்
உன் ஞாபகம் தாலாட்டும்



Авторы: s. a. rajkumar



Внимание! Не стесняйтесь оставлять отзывы.