Hariharan - Kadhal Vennila Lyrics

Lyrics Kadhal Vennila - Hariharan



ஆ...
காதல் வெண்ணிலா
கையில் சேருமா
சொல்லு பூங்காற்றே
நீ சொல்லு பூங்காற்றே
இமையாக நானும் இருப்பேன்
இமைக்காமல் பார்த்து ரசிப்பேன்
பல ஜென்மம் நான் எடுப்பேன்
உனக்காக காத்திருப்பேன்
காதல் வெண்ணிலா
கையில் சேருமா
சொல்லு பூங்காற்றே
நீ சொல்லு பூங்காற்றே
ஆ...
வானத்து நிலவாய் நீ இருந்தால்
உனக்கு பதில் நான் தேய்ந்திடுவேன்
தீபத்தை போலே நீ இருந்தால்
உனக்கு பதில் நான் உருகிடுவேன்
பூ வனம் போலே நீ இருந்தால்
பூவுக்கு பதில் நான் உதிர்த்திடுவேன்
சொல்லு பூங்காற்றே
நீ சொல்லு பூங்காற்றே
காதல் வெண்ணிலா
கையில் சேருமா
சொல்லு பூங்காற்றே
நீ சொல்லு பூங்காற்றே
ஆ...
ஓவியம் போல் உன்னை வரைந்திடவே
உதிரம் கொண்டு நிறம் எடுப்பேன்
சிலையென உன்னை செதுக்கிடவே
இமைகள் என்னும் உளியெடுப்பேன்
கவிதையைப் போல் உன்னை எழுதிடவே
உயிருக்குள் இருந்து சொல் எடுப்பேன்
சொல்லு பூங்காற்றே
நீ சொல்லு பூங்காற்றே
காதல் வெண்ணிலா
கையில் சேருமா
சொல்லு பூங்காற்றே
நீ சொல்லு பூங்காற்றே
இமையாக நானும் இருப்பேன்
இமைக்காமல் பார்த்து ரசிப்பேன்
பல ஜென்மம் நான் எடுப்பேன்
உனக்காக காத்திருப்பேன்
காதல் வெண்ணிலா
கையில் சேருமா
சொல்லு பூங்காற்றே
நீ சொல்லு பூங்காற்றே



Writer(s): Pa.vijay


Hariharan - Vaanathai Pola
Album Vaanathai Pola
date of release
27-08-2001




Attention! Feel free to leave feedback.