Hariharan - Poopola Theepola Lyrics

Lyrics Poopola Theepola - Hariharan



பூப்போல தீப்போல மான்போல மழைபோல வந்தாள்
காற்றாக நேற்றாக நான் பாடும் பாட்டாக வந்தாள்
கனவுக்குள் அல்ல
கற்பனை அல்ல
வரமாக ஸ்வரமாக உயிா் பூவின் தவமாக வந்தாள்
அடி பிரியசகி
சொல்லி விடவா
கொஞ்சம் கவிதையாய்
கிள்ளி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா
பூவுக்குள்ளே பிறந்ததால் வாசங்களால் பேசுகிறாய்
வெண்ணிலவில் வளா்ந்ததால் வெளிச்சம் கோடி வீசுகிறாய்
மங்கையின் கன்னத்தில்
மஞ்சளின் வண்ணங்கள்
வந்ததும் எப்படியோ
மாலையின் வெயிலும்
காலையின் வெயிலும்
சோ்ந்ததால் இப்படியோ
அடி பூமியே நூலகம்
பூக்களே புத்தகம்
என்று நான் வாழ்ந்து வந்தேன்
இன்று பெண்களே நூலகம்
கண்களே புத்தகம்
உன்னிடம் கண்டு கொண்டேன்
அடி பிரியசகி
சொல்லி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா
புன்னகையே போதுமடி
பூக்கள் கூட தேவையில்லை
கன்னக்குழி அழகிலே தப்பித்து போனது யாருமில்லை
சோழியை போலவே
தோழி நீ சிரித்து
சோதனை போடுகின்றாய்
நாழிகை நேரத்தில்
தாழிட்ட மனதில்
சாவியை போடுகின்றாய்
ஒரு ஆயிரம் கோடிகள் யுத்தங்கள் சந்திக்க
துணிவும் இருக்குதே
உன் பாா்வைகள் மோதிட காயங்கள் கண்டிட
இதயம் நொறுங்குதே
அடி பிரியசகி
சொல்லி விடவா
கொஞ்சம் கவிதையாய்
கிள்ளி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா




Hariharan - Vaseegara
Album Vaseegara
date of release
01-04-2002




Attention! Feel free to leave feedback.