A.R. Rahman, Shweta Mohan & Srinivas - Yaarumilla paroles de chanson

paroles de chanson Yaarumilla - Shweta Mohan , Srinivas



யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்
யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
இசையால் ஒரு உலகம்
அதில் நீ நான் மட்டும் இருப்போம்
கனவால் ஒரு இல்லம்
அதில் நாம் தான் என்றும் நிஜமாய்
ஓ... அது ஒரு ஏகாந்த காலம்
உன் மடி சாய்ந்த காலம்
இதழ்கள் எனும் படி வழியே
இதயத்துக்குள் அது இறங்கியது
காதல் காதல் காதல் காதல்
யாருமில்லா தனியரங்கில் ...
யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே ...
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
ஹோ... என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்
யாருமில்லா தனியரங்கில் ...
பேச மொழி தேவையில்லை
பார்த்துக்கொண்டால் போதுமே
தனிப்பறவை ஆகலாமா
மணிக்குயில் நானுமே
சிற்பம் போல செய்து
என்னை சேமித்தவன் நீயே நீயே
மீண்டும் எனை கல்லாய் செய்ய
யோசிப்பதும் ஏனடா சொல்
யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
ஹோ... என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்...



Writer(s): A R RAHMAN, RAFEEQ AHAMMED


A.R. Rahman, Shweta Mohan & Srinivas - Kaaviyathalaivan (Original Motion Picture Soundtrack)



Attention! N'hésitez pas à laisser des commentaires.