Harihara Sudhan feat. Namitha - Velli Nilave paroles de chanson

paroles de chanson Velli Nilave - Harihara Sudhan feat. Namitha



வெள்ளி நிலவ வெள்ளி நிலவ
நான் வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன்
அல்லி மலர அல்லி மலர
நீ வசியம் செஞ்சி மயக்கிபுட்ட
வெள்ளி நிலவ வெள்ளி நிலவ
நான் வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன்
அல்லி மலர அல்லி மலரை
நீ வசியம் செஞ்சி மயக்கிபுட்ட
என் கடிகாரம்
அது ஓடலையா
உன்ன பாக்காம
நேரம் போகலையா
அடி உன்ன தான் கடவுள்
பரிசாக கொடுத்தான்டா
வெள்ளி நிலவ அந்த வெள்ளி நிலவ
நான் வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன்
அல்லி மலர இந்த அல்லி மலர
நீ வசியம் செஞ்சு மயக்கிபுட்ட
முத்தம் ஒன்னு நான் கேட்கும்
நேரத்தில்
ரத்தத்துல சூடேறும்
மொத்தத்தையும் நான் கேட்க
ஏங்குகிறேன்
என் நெஞ்சம் காத்தில் பறக்கும்
உன்னுடைய காலடியில்
அய்யய்யோ
நான் விழுந்து கிடப்பேன்டா
நீ எனக்கு இல்லையின்னா
அம்மாடி
என் உசுர விடுவேன்டா
நான் காலையில கண்முழிச்சு
ஆத்தாடி உன் முகத்தை தேடுறன்டி
நான் சீலையில பூ பறிச்சி
உன் தோளில் மாலை கட்டி போடுறன்டா
அடி எனக்கென்ன ஆச்சு
புரியல பேச்சு
தலகீழா நடக்குறேன்டி
ஓரக்கண்ணில் நீ பார்த்தா
பார்த்ததும்
வானத்துல நான் பறப்பேன்
ஒத்த சொல்லு நீ சொன்னா
சொன்னதும்
உலகத்தை நான் மறப்பேன்
நெஞ்சுக்குள்ள நீ வந்த
வந்ததும்
நீயாக நான் ஆவேன்
தூங்கயிலே நீ வந்து
நின்னதும்
கனவுல முத்தம் கொடுப்ப
அடி காட்டுப்புலி நான்தாண்டி
என்னை இப்ப கட்டெறும்பா ஆக்கிபுட்ட
உன் பாசத்துக்கு முன்னாடி
என்னோட சொந்தமெல்லாம் மறந்தேன்டா
அடி ஏழேழு ஜென்மம்
நாம் இங்கு பொறந்து
சேர்ந்திங்கு வாழ்ந்திடலாம்
வெள்ளி நிலவ அந்த வெள்ளி நிலவ
நான் வீட்டுக்காரி ஆக்கிபுட்டேன்
அல்லி மலர இந்த அல்லி மலர நீ
வசியம் செஞ்சு மயக்கிபுட்ட
என் கடிகாரம்
அது ஓடலையா
உன்ன பாக்காம
நேரம் போகலையா
அடி உன்ன தான் கடவுள்
பரிசா கொடுத்தான்டா



Writer(s): Annamalai


Harihara Sudhan feat. Namitha - Kollidam - EP
Album Kollidam - EP
date de sortie
15-07-2019



Attention! N'hésitez pas à laisser des commentaires.