Songtexte




காலமே காலமே
என்னை எங்கு கொண்டு போகிறாய்
மன்னவன் சாகிறான்
கைகள் கட்டி பார்க்கிறாய்
வாழ்க்கையின் காரணம்
என்னை விட்டு போகுதோ
வீதியில் வீரவாள்
தீ பிடித்து வேகுதோ
திரும்பி வா
எழுந்து வா
திரும்பி வா
எழுந்து வா, எழுந்து வா
துணையில்லா வாழ்க்கையில்
துணையாய் உன் குரல்
திரும்பி வா
நிலையில்லா கூட்டத்தில்
நிலைக்கும் உன் பெயர்
எழுந்து வா
எழுந்து வா
நீ இல்லா பூமியில்
எங்கு நான் செல்லுவேன்
திரும்பி வா
எழுந்து வா
திரும்பி வா
எழுந்து வா, எழுந்து வா
மழைகளும் மண்ணில் விழும்பொழுது
மலைகளைதானே எழுப்பிடுது
வேங்கை வாழ்ந்த காட்டிலே
வேங்கை வந்து நிரப்பிடும் கதையோ
அரசன் நானோ
கோபம் ஒன்று எரியுதோ
முட்டும் பகை முடியுதோ
விட்டு வைத்த களத்திலே
சிங்கம் ஒன்று நுழையுதோ
எழுந்து வா
எழுந்து வா
எழுந்து வா
எழுந்து வா



Autor(en): A.r. Rahman, Vivek



Attention! Feel free to leave feedback.
Wird geladen
Wird geladen