Sid Sriram feat. Shashaa Tirupati - Visiri (From Enai Noki Paayum Thota) Songtexte

Songtexte Visiri (From Enai Noki Paayum Thota) - Sid Sriram feat. Shashaa Tirupati




எதுவரை போகலாம்
என்று நீ சொல்லவேண்டும்
என்றுதான் விடாமல் கேட்கிறேன்
தேன் முத்தங்கள் மட்டுமே
போதும் என்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்
யார் யாரோ கனாக்களில்
நாளும் நீ சென்று உலாவுகின்றவள்
நீ காணும் கனாக்களில் வரும்
ஓர் ஆண் என்றால் நான்தான் எந்நாளிலும்
பூங்காற்றே நீ வீசாதே ஓஓஓஓ
பூங்காற்றே நீ வீசாதே
நான்தான் இங்கே விசிறி
என் வீட்டில் நீ நிற்கின்றாய்
அதை நம்பாமல் என்னை
கிள்ளிக்கொண்டேன்
தோட்டத்தில் நீ நிற்கின்றாய்
உன்னை பூவென்று எண்ணி
கொய்ய சென்றேன்
புகழ் பூமாலைகள்
தேன் சோலைகள்
நான் கண்டேன்
ஏன் உன் பின் வந்தேன்
பெரும் காசோலைகள்
பொன்மாலைகள் வேண்டாமே
நீ வேண்டுமென்றேன் உயிரே
நேற்றோடு என் வேகங்கள்
சிறு தீயாக மாறி தூங்க கண்டேன்
காற்றோடு என் கோபங்கள்
ஒரு தூசாக மாறி போக கண்டேன்
உன்னை பார்க்காத நான்
பேசாத நான்
என் வாழ்வில் நீ நான் என்று நான்
தினம் நீ வந்ததால்
தோள் தந்ததால் ஆனேன்
நான் ஆனந்த பெண்தான் உயிரே
ஹோ ஹோ ஹோ
எதுவரை போகலாம்
என்று நீ சொல்லவேண்டும்
என்றுதான் விடாமல் கேட்கிறேன்
தேன் முத்தங்கள் மட்டுமே
போதும் என்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்
உன் போன்ற இளைஞனை
மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை
கண்டேன் உன் அலாதி தூய்மையை
என் கண் பார்த்து பேசும்
பேராண்மையை
பூங்காற்றே நீ வீசாதே ஓஓஓஓ
பூங்காற்றே நீ வீசாதே
நான்தான் இங்கே விசிறி



Autor(en): Thamarai, Darbuka Siva


Attention! Feel free to leave feedback.