Songtexte




ஏனோ மின்னலாய் என்னுள்ளே வந்தவள் நீ
நான் சுவாசிப்பேன் நேசிப்பேனே
தீரா காதலை நெஞ்சிலே தந்தவள் நீ
நான் வாழ்கிறேன் மாய்கிறேனே
பல மேகங்கள் சூடிய வானம்
அதில் வண்ணமாய் சேர்ந்தவளே
பல ராகங்கள் கூடிய கானம்
அதில் உன் இசை சேர்த்தவளே
குட்டி குட்டி கதைகள் பேசி
செல்ல செல்ல விதிகள் மீறி
மெல்ல மெல்ல புரிதல் கொள்வோம் காதலே
உன்னை நானும் தாங்கி பார்க்க
என்னை நீயும் கொஞ்சி தீர்க்க
நம்மை நாமே தூக்கி வெல்வோம் வாழ்விலே
புது வாசம் பூவொன்று தந்ததே
தேன் தேன் உன்னை தொட்டு தித்தித்தேன்
என் காதல் நீதான் கண்மணி
கொல் கொல் என்னை நீயும்
கொஞ்சம் கொல்லடி
பல மேகங்கள் சூடிய வானம்
அதில் வண்ணமாய் சேர்ந்தவளே
பல ராகங்கள் கூடிய கானம்
அதில் உன் இசை சேர்த்தவளே



Autor(en): Yuvan Shankar Raja



Attention! Feel free to leave feedback.
Wird geladen
Wird geladen