A.R. Rahman feat. Sathyaprakash & Chinmayi - Nallai Allai Lyrics

Lyrics Nallai Allai - Sathyaprakash , Chinmayi Sripada




வானில் தேடி நின்றேன்
ஆழி நீ அடைந்தாய்
ஆழி நான் விழுந்தாள்
வானில் நீ எழுந்தாய்
என்னை நட்சத்திர காட்டில் அலையவிட்டாய்
நான் என்ற எண்ணம் தொலையவிட்டாய்
நல்லை அல்லை நல்லை அல்லை
நன்னிலவே நீ நல்லை அல்லை
நல்லை அல்லை நல்லை அல்லை
நள்ளிரவே நீ நல்லை அல்லை
ஒலிகளின் தேடல் என்பதெல்லாம்
மௌனத்தில் முடிகின்றதே
மௌனத்தின் தேடல் என்பதெல்லாம்
ஞானத்தில் முடிகின்றதே
நான் உன்னை தேடும் வேளையிலே
நீ மேகம் சூடி ஓடிவிட்டாய்
நல்லை அல்லை நல்லை அல்லை
நன்னிலவே நீ நல்லை அல்லை
நல்லை அல்லை நல்லை அல்லை
நள்ளிரவே நீ நல்லை அல்லை
முகை முகல் முத்தென்ற நிலைகளிலே
முகம்தொட காத்திருந்தேன்
மலர் என்ற நிலை விட்டு பூத்திருந்தாய்
மனம் கொள்ள காத்திருந்தேன்
மகரந்தம் தேடி நுகரும் முன்னே
வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டால்
நல்லை அல்லை நல்லை அல்லை
நாறும்பூவே நீ நல்லை அல்லை
நல்லை அல்லை நல்லை அல்லை
முல்லை கொள்ளை நீ நல்லை அல்லை



Writer(s): A R Rahman, Vairamuthu




Attention! Feel free to leave feedback.