Anitha Karthikeyan feat. Shweta Mohan - Seetha Rama Saritham Lyrics

Lyrics Seetha Rama Saritham - Shweta Mohan , Anitha Karthikeyan




சீதா ராம சரிதம் ஸ்ரீ சீதா ராம சரிதம்
கானம் பொங்கும் ஞானம்
தியாகம் ஜென்ம புனிதம்
ஒரு முறை செவி பட வளமும் காணலாம்
அது வேத வடிவம்
லோக கணிதம் ஆதி கவி வால்மீகி எழுதும் சீதா ராம சரிதம்
கோதண்ட பானியாய் தண்டகாரன்யமதில் குடிவந்து மனையோடு நின்றனன்
கோதண்ட பானியாய் தண்டகாரன்யமதில் குடிவந்து மனையோடு நின்றனன்
கண்ணில் இமையாய் தம்பி வந்தனன்
வானத்தின் தேவனவன் மலர் நனைத்ததே
சுந்தர ராமனை மோகித்தாள்
ராவண சோதரி சூர்பனக
நீதி சொல்லியும் விலகவில்லை
அறிவுரை கேட்கவும் மனமுமில்லை
தவிர்கமுடியா லக்ஷ்மனனே முக்கையும் காதையும் அருத்தனனே
அண்ணா பாரேன ஆத்திர நாடகம் ராவண சபையில் ராட்சசி...
சூழ்நிலையில் மாயம் செய்தான் ராவணனேமாய
மானாய் மாறினானே மாரிசனே
சீதை விரும்ப அதனை விரட்டி பாய்ந்தனன் ஸ்ரீ ராமனே
அந்த சமயம் சீதையை சீரை எடுத்தான் ராவணனே
கடலின் நடுவில் இலங்கையிலே காவல் கைதி சீதை
காமேன்ரி ராட்சசியின் உரத்த பிடியில் பேதை
சோகத்திவில் நின்றாலே வைதேகி
அந்த சீதையிலா சோகத்திலே தாசரதி
சீதா சீதா சீதா சீதா என சீதைக்கு அது கேட்கும் படி
வானம் இடிந்து விழுந்தது போல் அவளின்றியே சீதா பதி
ராமனின் நிலைனை பார்த்தொரு சூழ்நிலை வெட்கி விழந்தன வேதங்களே
சீதைக் எனித்த கோடுரம்
ராமன் நெஞ்சில் பூகம்பம்
கமல விழிகள் கொஞ்சி முழுதும் பாவம் கண்ணீரிலே
காண முடியா கதிரவன் கடலின் உள்மூழ்ந்குதே
காண முடியா கதிரவன் கடலின் உள்மூழ்ந்குதே
வானர ராஜன் சுக்ரீவனுதன் ராமனே சேர்த்தான் மாருதி
கடலினை தாண்டி இலங்கையை சேர்த்து கண்டான் அங்கே சீதையை
ராமனின் மோதிரம் பணிவுடன் தந்து ராமன் செய்தியை சொன்னச்சு
இலங்கை எரித்து காற்றினை துளைத்து சீதை நிலையை ராமன் கேட்க சொன்னது என்ன செய்தது என்ன கைகள் கட்டி சொன்னான்
வாயு வேகத்துடன் வானர சேனைகள் கடலுக்கு பாலம் கட்டினர்
மாறு வேடத்துடன் ராம பத்ரனும் ராவணன் தலையை வீழ்த்தினான்
அனைவரும் சூழ்ந்திட உடன் வரும் சீதையை தூரந்தனில் நிற்க கூறினான்
அந்த பாடு பட்டு சீதை சிறையை விட்டு அழைத்து வந்த ஸ்ரீ ராமன்
நந்தம் வாழ ஜெகமெங்கும் காணவே விந்தை பரீட்சை விதித்ததேனோ?
எதற்கு இந்த பரீட்சை?
யாருக்கு இந்த பரீட்சை?
எதற்கு இந்த பரீட்சை?
யாருக்கு இந்த பரீட்சை?
ஸ்ரீ ராமனின் மனைவிக்கா கற்பு பரீட்சை?
அறிவிலாத அருள்நிதிக்கா அக்னி பரீட்சை?
தசரதனின் குல நிதிக்கா தர்ம பரீட்சை?
ஜனகன் மகள் ஜானகிக்கா மோன பரீட்சை?
ராமன் உயிர் ராணிக்கா?
ஜானகி பொன் மேனிக்கா?
சூரிய குல வாழ்விற்கா?
பூலோக வார்த்தைக்கா?
எதற்கு இந்த பரீட்சை?
யாருக்கு இந்த பரீட்சை? ஸ்ரீ ராமா...
அக்னி நோக்கி குதித்தாள் அவமானத்தினால் சதி
அக்னி நோக்கி குதித்தாள் அவமானத்தினால் சதி
நிழலும் எரிந்து நிஜமும் தெரிந்து நிலை குலைந்தது அவனி
அக்னி தேவன் அலறலே அண்டம் எங்கும் ஒலித்ததே
சீதை மகா பத்தினி அதை ஜகமே வழி மொழிந்ததே
உலகில் அனைவருக்கும் சீதை புனிதவதி சாக்ஷி ஆனான் ஸ்ரீ ராமன
அருட்ஜானகிஉடன் அயோத்தி சென்றான் சகல தர்மனுதன் தேவனே
சீதா சமேத ஸ்ரீ ராமனே



Writer(s): Piraisudan, Ilaiyaraaja



Attention! Feel free to leave feedback.