Deva feat. Hariharan - Poosu Manjal (Male) Lyrics

Lyrics Poosu Manjal (Male) - Hariharan , devA




பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு
என் கண்கள் பொய் சொல்லுமா
வேர் இல்லாமல் பூ பூக்குமா
கண்ணோடு ஆனந்தமா
என் நெஞ்சோடு பூகம்பமா
பிம்பமா உன் போலே பிம்பமா
நம்புமா என் உள்ளம் நம்புமா
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு
உயிர் நீங்கி போனவளே
என் உயிர் வாங்கி போனவளே
என் உயிர் போன தேகம் மட்டும்
நடமாடுதே பாரம்மா
என் வாழ்வே பாரமா
நீ தந்த காயங்கள் நெஞ்சோடு ஆறுமுன்னே
அழகான வாளொன்று அதை கீறுதே
தாங்குமா என் உள்ளம் தாங்குமா
உன் போன்ற புன்னகையால்
என் வாழ்வை குடிப்பவள் யார்
உன் போன்ற பார்வையினால்
என் கண்ணை எரிப்பவள் யார்
ஒரு தொடர்கதையே
இங்கு விடுகதையா
அந்த விடையின் எழுத்து எந்தன்
விதி வந்து மறைத்ததா
பொங்குதே கண்ணீரும் பொங்குதே
கண்களில் உன் பிம்பம் தங்குதே
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு
வடக்கே ஒரு அஸ்தமனம்
தெற்கே ஒரு சந்ரோதயம்
ஆகாயம் என்னோடு திசை மாறுதே
உண்மையா நான் என்ன பொம்மையா
ஒரு ஜென்மம் வாங்கி வந்து
இரு ஜென்மம் வாழுகிறேன்
இது என்ன கதை என்று விதி கேட்குதே
மாயமா என் கண்ணீர் மாறுமா
எங்கேயோ தொலைந்த விதை
இங்கே வந்து பூத்ததென்ன
முல்லை பூ என்றிருந்தேன்
முள்ளோடு பாய்ந்ததென்ன
நான் ஓட நினைக்க
நிழல் என்னை துரத்த
உயிர் திகைக்கும் பயணம்
எந்த திருப்பத்தில் முடிவது
ஓய்ந்ததே என் கால்கள் ஓய்ந்ததே
தீர்ந்ததே கண்ணீரும் தீர்ந்ததே
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு
என் கண்கள் பொய் சொல்லுமா
வேர் இல்லாமல் பூ பூக்குமா
கண்ணோடு ஆனந்தமா
என் நெஞ்சோடு பூகம்பமா
பிம்பமா உன் போலே பிம்பமா
நம்புமா என் உள்ளம் நம்புமா



Writer(s): Vairamuthu, Deva


Deva feat. Hariharan - Kanave Kalaiyathey (Original Background Score)
Album Kanave Kalaiyathey (Original Background Score)
date of release
01-08-1999



Attention! Feel free to leave feedback.
//}