Hariharan, Harris Jayaraj, Devan Ekambaram & VV Prassanna - Nenjukkul Peidhidum (From "Vaaranam Aayiram") Lyrics

Lyrics Nenjukkul Peidhidum (From "Vaaranam Aayiram") - Hariharan , Harris Jayaraj , Devan Ekambaram , VV Prassanna




நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காதலை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சநை
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ மோகமில்ல
நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்
இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
போகாதே
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காதலை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சநை
தூக்கங்களை தூக்கிச் சென்றாள்
தூக்கி சென்றாள்
ஏக்கங்களை தூவிச் சென்றாள்
உன்னை தாண்டி போகும் போது
போகும் போது.
வீசும் காற்றின் வீச்சு வேறு
நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்டால் அது காதல் இல்லை
என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காதலை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சநை
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி



Writer(s): THAMARAI, HARRIS JAYRAJ, HARIHARAN, V. PRASANNA, DEVAN


Attention! Feel free to leave feedback.