Srikanth Deva feat. Sathyan, Grace Karunaas & Shweta Mohan - Kanavilae Kanavilae Lyrics

Lyrics Kanavilae Kanavilae - Srikanth Deva , Sathyan




கனவிலே கனவிலே பல நாள் கண்டது
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது
எதுவும் பேசாமலே உரைப்பேன் என் காதலை
விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை
அவள் என்வசமே எனும் சங்கதியாய்
எட்டு திசைகளும் அதிருமே
சிறு புன்னகையில் எனை வென்றுவிடும்
அவள் தென்றலே
இரு கண்களையும் எழில் செய்துவிடும்
அவள் மின்னலே
காலை மாலை யாவுமே
காதல் கொள்ள வேணுமே
தினம் பேசி போகிற ஜாடைகள்
பல நூறு கவி சொல்லுதே
பகலே பகலே இரவாய் தோன்றிடு
இரவே இரவே பகலை நீங்கிடு
மூச்சுக் குழலிலே மோகம் விரியுதே
கூச்சம் தொலையவே தேகம் சரியுதே
கனவிலே கனவிலே பல நாள் கண்டது
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது
உடை தொட்ட இடம் விரல் தொட்டு விட
உயிர் கெஞ்சுமே
அடைபட்ட நதி உடைபட்டுவிட
அலை பொங்குமே
வாசம் வீசும் பூவிலே
நாளும் உந்தன் வாசனை
மிதமான சூரிய தீபமாய்
இமை நான்கு மொழி சிந்துதே
எது நீ எது நான் இனிமேல் தேடுவோம்
நதி நீ கரை நான் கலந்தே ஒடுவோம்
பூக்கள் முழுவதும் தீண்டும் வெறியிலே
கூட்டம் நடத்துமே தோற்கும் அழகிலே
கனவிலே கனவிலே பல நாள் கண்டது
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது
எதுவும் பேசாமலே உரைப்பேன் என் காதலை
விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை
அவள் என்வசமே எனும் சங்கதியாய்
எட்டு திசைகளும் அதிருமே



Writer(s): Yugabharathi, Srikanth Deva



Attention! Feel free to leave feedback.