Sujatha - Vaanampaadiyin Lyrics

Lyrics Vaanampaadiyin - Sujatha



வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்
வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம்
ஒரு சிலையின் காதில் நான் பாட அது உயிரும் வந்து நடமாட
ஒரு செடியின் காதில் நான் பாட அதில் ரோஜா பூக்கள் பூத்தாட
வானவில் வந்தது வசந்தமும் வந்தது பாட்டுக்கள் கேட்பதற்கு
வானவில் வந்தது வசந்தமும் வந்தது பாட்டுக்கள் கேட்பதற்கு
வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்
வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம்
திரும்பும் எந்த திசையிலும் என் பாடல்கள் கேட்குமே
விரும்பும் நேயர் வரிசையிலே குயில்களும் சேருமே
உதிர்ந்து விழும் இலைகள் எல்லாம் என் பாடல்கள் கேட்டபடி
இலைகளுக்கே தெரிந்ததடி அந்த இயற்கையும் வியக்குதடி
பாலைவனங்களில் என் பாடல்கள் சோலையடி
மனசுக்கு மனசு பாலங்கள் போட பாட்டுக்கள் போதுமடி
வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்
வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம்
வாசல் தேடி வந்ததடி சொர்கமே சொர்கமே
வானம் கூட தொட்டுவிடும் தூரமே தூரமே
கனவுகளின் பேரெழுதி ஒரு தேவதை வாங்கிக்கொண்டாள்
நிமிடத்துக்கு ஒன்று என அந்த கனவுகள் பலிக்க வைத்தாள்
கோயில் மணிகளே என்னை வாழ்த்திட ஒலி கொடுங்கள்
மெல்லிசை ராஜ்ஜியம் என் வசம் ஆனது பூமழை பொழிகிறது
வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்
வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம்
ஒரு சிலையின் காதில் நான் பாட அது உயிரும் வந்து நடமாட
ஒரு செடியின் காதில் நான் பாட அதில் ரோஜா பூக்கள் பூத்தாட
வானவில் வந்தது வசந்தமும் வந்தது பாட்டுக்கள் கேட்பதற்கு
வானவில் வந்தது வசந்தமும் வந்தது பாட்டுக்கள் கேட்பதற்கு
பாலா



Writer(s): s. a. rajkumar



Attention! Feel free to leave feedback.