A.R. Rahman, Madhushree & Hentry Kuruvila - Marudaani (From "Sakkarakatti") paroles de chanson

paroles de chanson Marudaani (From "Sakkarakatti") - A.R. Rahman, Madhushree & Hentry Kuruvila




மருதாணி மருதாணி
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
கங்கை என்று கானலை காட்டும் காதல்
கானல் என்று கங்கையை காட்டும்
வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல் தான்
நிலையான பாடல் தான்
அதன் ஓசை என்னாளும் ஓயாது
மருதாணி மருதாணி விழியில் ஏன்
அவன் இதய வீட்டில் வாழும்
அவள் தேகம் வெந்து போகும்
என அவன் அருந்திட மாட்டான்
சுடு நீரும் சுடு சோறும்
காதலி கை நகம் எல்லாம்
பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான்
ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி
உணரவில்லை இன்னொரு பாதி
மருதாணி விழியில் ஏன்
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல் தான்
நிலையான பாடல் தான்
அதன் ஓசை என்னாளும் ஓயாது
அவள் அவன் காதல் நெஞ்சில்
கண்டாலே சிறு குற்றம்
அவன் நெஞ்சம் தாய்பால் போலே
என்னாளும் பரிசுத்தம்
ஆத்திரம் நேத்திரம் மூட
பாலையும் கள்ளாய் அவள் பார்க்கிறாள்
ஆக மொத்தம் அவசரக் கோலம்
அவளுக்கிதை காட்டிடும் காலம்
மருதாணி மருதாணி
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
கங்கை என்று கானலை காட்டும் காதல்
கானல் என்று கங்கையை காட்டும்
வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல் தான்
நிலையான பாடல் தான்
அதன் ஓசை என்னாளும் ஓயாது
மருதாணி மருதாணி விழியில் ஏன்
மருதாணி மருதாணி
மருதாணி மருதாணி விழியில் ஏன்



Writer(s): VAALEE, A.R. RAHMAN


Attention! N'hésitez pas à laisser des commentaires.
//}