Hariharan - Ennai Pada Vaitha paroles de chanson

paroles de chanson Ennai Pada Vaitha - Hariharan




என்னை பாட வைத்த பேசும் பூவே
உன்னை எண்ணி வாழுகின்றேன்
என் தாகம் தீர உந்தன் பெயரை
சொல்லி சொல்லி பாடுகின்றேன்
இமைகள் பார்த்ததும் எதிரில் வேண்டும் உன் முகம்
எனது சுவாசம் உன்வாசம்
என்னை பாட வைத்த பேசும் பூவே
உன்னை எண்ணி வாழுகின்றேன்
தாய் அன்று கொடுத்த முத்தங்கள் கூட
உன் கிள்ளல் போல சுகமாயில்லை
மூங்கிலில் பாடும் ராகத்தில் கூட
நீ திட்டும் அழகின் இதமே இல்லை
உன் பேச்சில் தெறிக்கும் எச்சில் துளி
மோட்சத்தை அடைய சொல்லும் வழி
நான் ஆலயம் சென்று பார்க்கிறேன்
அங்கு சாமி உன் சாயலில்
என்னை பாட வைத்த பேசும் பூவே
உன்னை எண்ணி வாழுகின்றேன்
பூவுக்குள் வாசம் பொழுதானால் தீரும்
உன் வாசம் என்றும் தீராதம்மா
ஒலியரை யாவும் சிலநேரம் தூங்கும்
உன் நேசம் என்றும் நீங்காதம்மா
அன்பே நீ சிரித்தால் சிரிப்புகள்
என் வாழ்வில் கிடைத்த கவிதைகள்
உன்னை காணத்தான் கண்கள் வாங்கினேன்
உன்னை காண நெஞ்சம் துடிக்கின்றதே
என்னை பாட வைத்த பேசும் பூவே
உன்னை எண்ணி வாழுகின்றேன்
என் தாகம் தீர உந்தன் பெயரை
சொல்லி சொல்லி பாடுகின்றேன்
இமைகள் பார்த்ததும எதிரில் வேண்டும் உன் முகம்
எனது சுவாசம் உன்வாசம்
என்னை பாட வைத்த பேசும் பூவே
உன்னை எண்ணி வாழுகின்றேன்



Writer(s): s. a. rajkumar


Attention! N'hésitez pas à laisser des commentaires.
//}