Hariharan - Oru Thadavai paroles de chanson

paroles de chanson Oru Thadavai - Hariharan




ஒரு தடவை சொல்வாயா
உன்னை எனக்குப் பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையைப் போல
மறைத்து வைத்தால் தெரிந்துவிடும்
காதலில் தான் பூக்கள் மோதி
மலைகள் கூட உடைந்துவிடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே
நதியில் தெரியும் நிலவின் உருவம்
நதிக்குச் சொந்தமில்லை
நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்கை
யாருக்கும் அமைவதில்லை
உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு
தானாய் விழுந்ததில்லை
உலக உருண்டை உடையும் போதும்
காதல் உடைவதில்லை
மின்மினி தேசத்து சொந்தக்காரன்
விண்மீன் கேட்பது தவறாகும்
வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம்
வலியோடு போராடும் காதல் தானே
ஒரு தடவை சொல்வாயா
உன்னை எனக்குப் பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
நெருங்க நினைக்கும் நினைவை மறக்க
நெஞ்சம் நினைக்கிறது
கனவில் பூக்கும் பூக்கள் பறிக்க
பெண்மை அழைக்கிறது
கிளையை முறித்து போட்டு விடலாம்
வேரை என்ன செய்வாய்?
தரையை உடைத்து முளைக்கும் போது
அன்பே எங்கு செல்வாய்?
மல்லிகை பூக்கள் உதிர்வதெல்லாம்
மரத்தடி நிழலுக்குச் சொந்தமில்லை
உன்னோடு நான் வாழ போராடுவேன்
நீ இன்றி போனாலும் தள்ளாடுவேன்
ஒரு தடவை சொல்வாயா
உன்னை எனக்குப் பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையைப் போல
மறைத்து வைத்தால் தெரிந்துவிடும்
காதலில் தான் பூக்கள் மோதி
மலைகள் கூட உடைந்துவிடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே



Writer(s): Na. Muthu Kumar


Attention! N'hésitez pas à laisser des commentaires.