K. S. Chithra feat. K. J. Yesudas - Thanga Magan Indru Singanadai paroles de chanson

paroles de chanson Thanga Magan Indru Singanadai - K. S. Chithra , K. J. Yesudas




தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனைக் கண்டதும் விலகியதே
ரத்தத்தாமரை முத்தம் கேட்குது வா... என் வாழ்வே வா
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
சின்னக் கலைவாணி நீ வண்ணச் சிலை மேனி
அது மஞ்சம்தனில் மாறன் தலை வைக்கும் இன்பத் தலகாணி
ஆசைத் தலைவன் நீ நான் அடிமை மஹராணி
மங்கை இவள் அங்கம் எங்கும் பூச நீதான் மருதாணி
திறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும்
தென்பாண்டித் தென்றல் திறந்தாக வேண்டும்
என்ன சம்மதமா... இன்னும் தாமதமா
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
தூக்கம் வந்தாலே மனம் தலயணைத் தேடாது
தானே வந்து காதல் கொள்ளும் உள்ளம் ஜாதகம் பார்க்காது
மேகம் மழை தந்தால் துளி மேலே போகாது
பெண்ணின் மனம் ஆணில் விழ வேண்டும் விதிதான் மாறாது
என் பேரின் பின்னே நீ சேர வேண்டும்
கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும்
என்னை மாற்றி விடு... இதழ் ஊற்றிக்கொடு
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை உன் காதலன் கண்டதும் நழுவியதோ
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனைக் கண்டதும் விலகியதோ
முத்தம் என்பதன் அர்த்தம் பழகிட வா என் வாழ்வே வா
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்



Writer(s): Deva Ind, Vairamuthu



Attention! N'hésitez pas à laisser des commentaires.