paroles de chanson Chinnappayalae - From "Arasilangkumari" - T. M. Soundararajan
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா
நீ எண்ணிப்பாரடா
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி
உன் நரம்போடு தான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி
உன் நரம்போடு தான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா
தம்பி மனதில் வையடா
மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா
தம்பி மனதில் வையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே
நீ வலது கையடா
நீ வலது கையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே
நீ வலது கையடா
நீ வலது கையடா
தனி உடமை கொடுமைகள் தீர
தொண்டு செய்யடா
நீ தொண்டு செய்யடா
தனி உடமை கொடுமைகள் தீர
தொண்டு செய்யடா
நீ தொண்டு செய்யடா
தானாய் எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா
எல்லாம் பழைய பொய்யடா
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு...
வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க
உந்தன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே
நீ வீட்டிற்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே
நீ வெம்பி விடாதே
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா
நீ எண்ணிப்பாரடா
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா

Attention! N'hésitez pas à laisser des commentaires.