Chitra & Anuradha - Enthan Kural текст песни

Текст песни Enthan Kural - Chitra & Anuradha




படம்: கோகுலத்தில் சீதை
பாடல்: எந்தன் குரல் கேட்டு
இசை அமைப்பாளர்: தேவா
பாடகர்: சித்ரா
எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாத
பந்தம் நான் இல்லை
பரிதாபம் கூடாத
நண்பனே நண்பனே
இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா
உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா
இதை யாரிடம் சொல்லுவேன்
எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாத
பந்தம் நான் இல்லை
பரிதாபம் கூடாத
நண்பனே நண்பனே
இரவென்றும் பகல் என்றும் உனகில்லையே
இளங்காலை பொன்மாலை உனகில்லையே
மதுவென்னும் தவறுக்கு ஆளாகினாய்
அதற்காக நியாயங்கள் நீ தேடினாய்
ஆயிரம் பூக்களில் ஆனந்தம் காண்கிறாய்
நிறங்களே வேற்றுமை நினைத்திடு நண்பனே
மது கின்னம்தனை எடுத்து
பெண்ணை விலை கொடுத்ததும்
விழி மூடுமா
எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாத
பந்தம் நான் இல்லை
பரிதாபம் கூடாத
வரவின்றி செலவானால் தவறில்லையே
வாழ் நாட்கள் செலவானால் வரவில்லையே
நேற்றோடும் இன்றோடும் நீ இல்லையே'
நாளை உன் கையேடு உனகில்லையே
யாரிடம் தவறில்லை
யாரிடம் குறை இல்லை
தூக்கமே நிம்மதி
தூங்கிடு நண்பனே
நீ கடந்த காலங்களை
களைந்து எரிந்து விடு
விழி மூடுமே
எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாத
பந்தம் நான்
பரிதாபம் கூடாதா
நண்பனே நண்பனே இல்லை
இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா
உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா
இதை யாரிடம் சொல்லுவேன்
நண்பனே நண்பனே
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்



Авторы: Agathiyan



Внимание! Не стесняйтесь оставлять отзывы.