P. Jayachandran feat. S. Janaki - Raja Magal Roja Malar текст песни

Текст песни Raja Magal Roja Malar - P. Jayachandran , S. Janaki




ராஜா மகள் ரோஜா மகள்
ராஜா மகள் ரோஜா மகள்
வானில் வரும் வெண்ணிலா
வாழும் இந்தக் கண்ணிலா
கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக் குயிலா
ராஜா மகள் ரோஜா மகள்
ஹஆஅஆஅஆஅ
ஆஅஆஅஆஅஆஅஆஅஆஅஆ
பன்னீரையும் வெந்நீரையும்
உன்னோடு நான் பார்க்கிறேன்
பூ என்பதா பெண் என்பதா
நெஞ்சோடு நான் கேட்கிறேன்
முள்ளோடுதான் கள்ளோடுதான்
ரோஜாக்களும் பூக்கலாம்
அம்மாடி நான் அத்தோடுதான்
உன் பேரையும் சேர்க்கலாம்
கோபம் ஒரு கண்ணில்
தாபம் ஒரு கண்ணில்
வந்து வந்து செல்ல
விந்தை என்ன சொல்ல
வண்ண மலரே
ராஜா மகள் ரோஜா மகள்
ஹாஆஅஆஅஆஅஆஅஆஅ
ஹஆஅஆஅஆஅ
ஆஅஆஅஆஅஆஅஆஅஆஅஆ
ஆடைகளும் ஜாடைகளும்
கொண்டாடிடும் தாமரை
வையகமும் வானகமும்
கை வணங்கும் தேவதை
நீயும் ஒரு ஆணை இட
பொங்கும் கடல் ஓயலாம்
மாலை முதல் காலை வரை
சூரியனும் காயலாம்
தெய்வ மகள் என்று
தேவன் படைத்தானோ
தங்கச் சிலை செய்து
ஜீவன் கொடுத்தானோ
மஞ்சள் நிலவே
ராஜா மகள் ரோஜா மகள்
வானில் வரும் வெண்ணிலா
வாழும் இந்தக் கண்ணிலா
கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக் குயிலா
ராஜா மகள் ரோஜா மகள்



Авторы: Vaalee, Ilaiyaraaja


Внимание! Не стесняйтесь оставлять отзывы.