T. M. Soundararajan - Oraaru Mugamum текст песни

Текст песни Oraaru Mugamum - T. M. Soundararajan



ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும்
துன்பம் வாராத நிலைதன்னைச் சேர்க்கும்
அய்யன் ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும்
ஆராவமுதென அருள்மழை பெய்யும்
ஆராவமுதென அருள்மழை பெய்யும்
கூரான வேல் கொண்டு கொடுமைகளைக் கொய்யும்
ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும்
ஸ்வாமி மலையில் சிவகுருவென்று
ஸ்வாமி மலையில் சிவகுருவென்று
திரு சீரலைவாயிலில் சூரனை வென்று
தேமதுர மொழியாள்...
தேமதுர மொழியாள் தெய்வானையை மணந்த
திருப்பரங்குன்றில் தரிசனம் தந்த அந்த
ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும்
மாமனைப்போல் இரு மாதுடன் கூடி
மாமனைப்போல் இரு மாதுடன் கூடி
மாலையில் பழமுதிர்ச் சோலையிலாடி
மாமயிலேறிட திருத்தணியைத் தேடி
மாமயிலேறிட திருத்தணியைத் தேடி
மோஹமெல்லாம் தீர்ந்து ஆவினன்குடி சேர்ந்த
ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும்
துன்பம் வாராத நிலைதன்னைச் சேர்க்கும்



Авторы: VAALEE, T. M. SOUNDERARAJAN


T. M. Soundararajan - T.M.Sounderarajan - Tamil Devotional
Альбом T.M.Sounderarajan - Tamil Devotional
дата релиза
01-08-1989




Внимание! Не стесняйтесь оставлять отзывы.