Unni Menon - Kannukkulle текст песни

Текст песни Kannukkulle - Unni Menon




கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி
நெடுங்காலமாய் புழங்காமலே
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே
உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே
உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே
தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி
நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
மழை மேகமாய் உருமாறவா
உன் வாசல் வந்து உயிர் தூவவா
மனம் வீசிடும் மலராகவா
உன் கூந்தல் மீது தினம் பூக்கவா
கண்ணாக கருத்தாக
உனை காப்பேன் உயிராக
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
அட உன்னுள் உறைந்தேனே
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி



Авторы: muthuvijayan, s. a. rajkumar



Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}