Suranjan feat. Shweta Pandit - Never Let Me Go Lyrics

Lyrics Never Let Me Go - Suranjan feat. Shweta Pandit



கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடி
மௌனங்கள் மாயமாய் போகாதோ
என்றும் உன் ஞாபகம்
கண் முன்னே தோன்றுதே
உன் உள்ளம் என் காதலால் மாறாதோ
கைக்கோர்த்து நாம் நடந்த பாதைகள்
நீ இல்லை என்று குறை கூறுதே
மழைத்துளிகள் மண்ணை சேர்கையில்
உனது வாசம் என்னுள் நினைவூட்டுதே
ஆற்றிலே மிதக்கும் ஓடமாய்
பாதையை தேடினேன் உன் பாதத்தில்
கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ
இலை நீரில் மூழ்குமா
நிலா காதல் கூறுமா
துளி கூட துணையின்றி வாடுமா
கடிகார முட்கள் போல
உயிர் உன்னை சுற்றி வருதே
நிகழ் காலம் நிழல் இன்றி வாடுதே
சொல்லாமலே மனங்களும் சேர்ந்ததன்று
விடை சொல்லியே முறிந்தது காதல் இன்று
காற்றிலே களையும் மேகமாய்
போகிறேன் தூரமாய்.ஓஹோ.ஓ
கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ
என்றும் உன் ஞாபகம்
கண் முன்னே தோன்றுதே
உன் உள்ளம் என் காதலால் மாறாதோ
கைக்கோர்த்து நாம் நடந்த பாதைகள்
நீ இல்லை என்று குறை கூறுதே
மழைத்துளிகள் மண்ணை சேர்கையில்
உனது வாசம் என்னுள் நினைவூட்டுதே
ஆற்றிலே மிதக்கும் ஓடமாய்
பாதையை தேடினேன் உன் பாதத்தில்
கண்ணே என் கண்களில் கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ



Writer(s): yuvan shankar raja


Suranjan feat. Shweta Pandit - Pyaar Prema Kaadhal (Original Motion Picture Soundtrack)



Attention! Feel free to leave feedback.