A. R. Rahman feat. S. P. Balasubrahmanyam - Engae Pogudho Vaanam (From "Engae Pogudho Vaanam") Lyrics

Lyrics Engae Pogudho Vaanam (From "Engae Pogudho Vaanam") - A. R. Rahman feat. S. P. Balasubrahmanyam



எங்கே போகுதோ வானம்
எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்
வாழ்வில் மீண்டாய் வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை தலைவா
காற்றின் பாடல்கள் என்றுமே தீராது
வெற்றிச் சங்கொலி என்றுமே
ஓயாது ஓயாது
ஹே உனது வாளால் ஒரு சூரியனை உண்டாக்கு
ஹே எனது தோழா நம் தாய்நாட்டை பொன்னாக்கு
ஆகாயம் தடுத்தால் பாயும் பறவை ஆவோம்
மாமலைகள் தடுத்தால் தாவும் மேகம் ஆவோம்
காடு தடுத்தால் காற்றாய் போவோம்
கடலே தடுத்தால் மீன்கள் ஆவோம்
வீரா வைரம் உன்
நெஞ்சம் நெஞ்சம் நெஞ்சம்
வெற்றி உன்னை வந்து
கெஞ்சும் கெஞ்சும் கெஞ்சும்
லட்சியம் என்பதெல்லாம் வலி கண்டு பிறப்பதடா
வெற்றிகள் என்பதெல்லாம் வாள் கண்டு பிறப்பதடா
எங்கே போகுதோ வானம் அங்கே போகிறோம் நாமும்
வாழ்வில் மீண்டாய் வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை தலைவா
எந்தன் வில்லும் சொல்லிய சொல்லும்
எந்த நாளும் பொய்த்ததில்லை
இளைய சிங்கமே எழுந்து போராடு போராடு
வீரா வைரம் உன்
நெஞ்சம் நெஞ்சம் நெஞ்சம்
வெற்றி உன்னை வந்து
கெஞ்சும் கெஞ்சும் கெஞ்சும்
உங்களின் வாழ்த்துக்களால்
உயிர் கொண்டு எழுந்து விட்டேன்
வாழ்த்திய மனங்களுக்கு
என் வாழ்க்கையை வழங்கி விட்டேன்
ஹே உனது வாளால் ஒரு சூரியனை உண்டாக்கு
ஹே எனது தோழா நம் தாய்நாட்டை பொன்னாக்கு
எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்
வாழ்வில் மீண்டாய் வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை தலைவா
காற்றின் பாடல்கள் என்றுமே தீராது
வெற்றிச் சங்கொலி என்றுமே
ஓயாது ஓயாது



Writer(s): A R Rahman, Vairamuthu



Attention! Feel free to leave feedback.