G. V. Prakash feat. Arunraja Kamaraj - Adangathey Lyrics

Lyrics Adangathey - Arunraja Kamaraj , G.V. Prakash Kumar




அடங்க மறு அத்து மீறு
திமிறி எழு தீர்த்து முடி
அசராதே பணியாதே
உடையாதே உரியாதே
தனியாய் என்றும்
கலையாதே கசங்காதே
கலங்காதே ஒடுங்காதே
தடைகளை கண்டு அகழாதே இகழாதே
தனியாதே தயங்காதே
துணிந்து நின்று அசையாதே இசையாதே
முடங்காதே மடங்காதே
அடங்காதே அடங்காதே
தடை பல உடைத்தெறி
படைகளை சிதைத் தெறி சிதைத்தெறி
வேட்கைகள் அனல் பொறி
வெற்றியின் விசைத் தறி விசைத்தறி
அடங்காதே அடங்காதே
எவன் வந்து அடக்குவான்
மற தமிழ் மகன் உன்னை
இறப்பினை ஒரு முறை
துணிந்து நீ பகை உடை
எவன் வந்து அடக்குவான்
மற தமிழ் மகன் உன்னை
இறப்பினை ஒரு முறை
துணிந்து நீ பகை உடை
உணர்வுக்கு திறந்தெழு
அடக்குவான் வெகுண்டெழு
எவனுக்கும் எதற்குள்ளும்
அடக்கிட நினைச்சிட்டா
திமிறிட்டு எழுந்திடு திசை எட்டும் பறந்திடு
உயரத்தை அடைந்து
நீ உலகுக்கு உறக்கச்சொல்
உறக்கச்சொல் உறக்கச்சொல்
உறக்கச்சொல் உறக்கச்சொல்
அடங்காதே
உறவுகள் உணர்வுகள் உனக்கென உதிர்த்திட
பறவைகள் விலங்குகள் தனக்கென பிழைத்திட
திமிருகள் திணவுகள் தனித்துவம் படைத்திட
தரவுகள் திறமைகள் உனக்கென அமைந்திட
வா துணிந்து நில்லு நீ கூர் அம்பின் வில்லு
தீ பறக்கும் சொல்லு இது தாண்ட தமிழன் தில்லு



Writer(s): Arunraja Kamaraj, Prakash Kumar G V



Attention! Feel free to leave feedback.