K. S. Chithra feat. Devisri prasad - Angel Vandhaaley ( From"Badhri") Lyrics

Lyrics Angel Vandhaaley ( From"Badhri") - Devisri prasad , K. S. Chithra




ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு
வாழ்வின் வண்ணங்கள் மாறியதே இன்று என்னோடு
ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு
உன் கூந்தல் வகுப்பில் லவ் பாடம் படிக்கும் மாணவனாய் இருந்தேனே
ஹேய் உன் மேனி அழகை ஆராயும் விஞ்ஞானி போல் இந்து ஆனேனே
எல்லாம் சக்சஸ் தான் இனிமேல் கிஸ் கிஸ் தான் வா வா வா
என் வானம் சுழலும் என் பூமி எல்லாமே நீதானே ஹே வா வா வா
நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை நீந்தி வந்து அறிந்தாயே நன்றி உயிரே
நெஞ்சுக்குள் வைத்திருந்த புயல் ஒன்றை சொல்லும்முன் அறிந்தாயே நன்றி உயிரே
உந்தன் மார்பில் படர்ந்து விடவா
உந்தன் உயிரில் உறைந்து விடவா
உறவில் உறவில் இது ஒரு தவம்
நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை நீந்தி வந்து அறிந்தாயே நன்றி உயிரே
ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு
வாழ்வின் வண்ணங்கள் மாறியதே இன்று என்னோடு
ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு



Writer(s): Palani Barathi



Attention! Feel free to leave feedback.
//}