Ilaiyaraaja - Sola Pasunkiliye paroles de chanson

paroles de chanson Sola Pasunkiliye - Ilaiyaraaja




சோழ பசுங்கிளியே.
சொந்தமுள்ள பூங்கொடியே
ஈச்ச இளங்குறுத்தே என் தாயி சோலையம்மா
கோடி திரவியமே வந்தது வந்தது ஏன்
கொள்ள போனது போனது ஏன்
ஆவி துடிக்க விட்டு சென்றது சென்றது ஏன்
விட்டு சென்றது சென்றது ஏன்
சோழ பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கொடியே
ஈச்ச இளங்குறுத்தே என் தாயி சோலையம்மா
கண்ணுபட போகும் என்று பொத்தி வச்ச பூங்குயிலே
மண்ணு பட்டு போகும் என்று நெஞ்சம் இன்று தூங்கலியே
வாங்கி வந்த மல்லியப்பூ வாசம் இன்னும் போகலியே
பந்தகாலு பள்ளம் இன்னும் மண்ணெடுத்து மூடலியே
நீ வாழ்ந்த காட்சி எல்லாம் தேடுகின்றேனே
நான் இங்கே நாதி இன்றி வாடுகின்றேனே
சோழ பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கொடியே
கோடி திரவியமே வந்தது வந்தது ஏன்
கொள்ள போனது போனது ஏன்
ஆவி துடிக்க விட்டு சென்றது சென்றது ஏன்
விட்டு சென்றது சென்றது ஏன்
தங்கத்துல தாலி பண்ணி தங்கத்துக்கு போட்டேனே
தங்கியவள் வாழவும் இல்லே தட்டு கெட்டு போனேனே
சங்கு நிற தாமரைய செங்கரையான் தீண்டிடுமோ
மஞ்ச முக மல்லிகைய மண்கரையான் மாத்திடுமோ
கற்பூர கட்டி ஒன்னு காத்துல போனதடி
செந்தூர வாழை ஒன்னு சேத்துல சாஞ்சதடி
சோழ பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கொடியே
கோடி திரவியமே வந்தது வந்தது ஏன்
கொள்ள போனது போனது ஏன்
ஆவி துடிக்க விட்டு சென்றது சென்றது ஏன்
விட்டு சென்றது சென்றது ஏன்
சோழ பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கொடியே
ஈச்ச இளங்குறுத்தே என் தாயி சோலையம்மா...




Attention! N'hésitez pas à laisser des commentaires.