Ilayaraja - Unnai Thaney Thanjam paroles de chanson

paroles de chanson Unnai Thaney Thanjam - K. J. Yesudas



உன்னை தானே தஞ்சம் என்று
நம்பி வந்தேன் நானே
உயிர் பூ எடுத்து ஒரு மாலை இட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்
உன்னை தானே தஞ்சம் என்று
நம்பி வந்தேன் நானே
உயிர் பூ எடுத்து ஒரு மாலை இட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்
உன்னை தானே .
மலரின் கதவொன்று திறக்கின்றதோ
மௌனம் வெளியேற தவிக்கின்றதா
பெண்மை புதிதாக துடிக்கின்றதோ
உயிரே அமுதங்கள் சுரக்கின்றதா
முத்தம் கொடுத்தானே
இழழ் முத்து குளித்தானே
இரவுகள் இதம் ஆனதால்
கட்டி பிடித்தால் தொட்டு இழுத்தால்
வெட்கம் என்ன சத்தம் போடுதா
என்னை தானே தஞ்சம் என்று
நம்பி வந்தாய் மானே
உயிர் பூ எடுத்து ஒரு மாலை இடு
விழி நீர் தொடுத்து ஒரு கோலம் இடு
என்னை தானே ...
உலகம் எனக்கென்றும் விளக்கானது
உறவே எனக்கு இன்று விலங்கானது
அடடா முந்தானை சிறையானது
இதுவே என் வாழ்வில் முறையானது
பாறை ஒன்றின் மேலே
ஒரு பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்ததே
என்னை தானே தஞ்சம் என்று
நம்பி வந்தாய் மானே
உயிர் பூ எடுத்து ஒரு மாலை இடு
விழி நீர் தொடுத்து ஒரு கோலம் இடு
என்னைத் தானே தஞ்சம் என்று
நம்பி வந்தாய் மானே



Writer(s): Vaali, Ilaiyaraaja, Muthulingam, Vairamuthu Ramasamy Thevar, Kamarajan Na, Amaren Gangai


Ilayaraja - Nallavanukku Nallavan (Original Motion Picture Soundtrack) - EP




Attention! N'hésitez pas à laisser des commentaires.