Hiphop Tamizha - Azhage paroles de chanson

paroles de chanson Azhage - Nakul Abhyankar




அந்த சாலை ஓரம்
ஒரு மாலை நேரம்
மங்கும் இரவின் ஒளியினிலே
நீயும் நானும் இருகைகள் கோா்த்து
பெண்ணே நடந்து போகையிலே
என்னை தள்ளிவிட்டு நீ நடந்தால்
என் நெஞ்சில் இனம் புாியாத பயம்
எந்தன் கைகளை பிடித்துக்கொண்டால்
அடி என்னுள் தோன்றும் கோடி சுகம்
உந்தன் மடியினிலே
ஒரு நூறு ஆண்டு வாழவேண்டுமடி
உந்தன் மிதியடியாய்
இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி
அழகே அழகே
நீ அசைந்தால் அசையும் உலகே
அமுதே அமுதே
உந்தன் இதழ்கள் தான் என் உணவே
அழகே அழகே
நீ அசைந்தால் அசையும் உலகே
அமுதே அமுதே
உந்தன் இதழ்கள் தான் என் உணவே
பொன்மலைச் சாரலில் மல்லிகைப் பூவென
மின்னிடும் தாரகை நீ வரவே
கைகளைக் கூப்பியே முத்தங்கள் சோ்த்திட
கன்னங்கள் பாா்த்து நான் காத்திருப்பேன்
தேய் பிறையாய் தேய் பிறையாய்
என்னை தேய்த்து போகாதே
நான் தேய்ந்துப் போனாலும்
என் காதல் பௌா்ணமி ஆகிடுமே
காதலிலே காதலிலே தோல்விகள் கிடையாதே
நான் தோற்றே போனாலும்
எந்தன் காதல் தோற்காதே
உந்தன் மடியினிலே
ஒரு நூறு ஆண்டு வாழவேண்டுமடி
உந்தன் மிதியடியாய்
இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி
அழகே அழகே
நீ அசைந்தால் அசையும் உலகே
அமுதே அமுதே
உந்தன் இதழ்கள் தான் என் உணவே
அழகே அழகே
நீ அசைந்தால் அசையும் உலகே
அமுதே அமுதே
உந்தன் இதழ்கள் தான் என் உணவே
பொன்மலைச் சாரலில் மல்லிகைப் பூவென
மின்னிடும் தாரகை நீ வரவே
கைகளைக் கூப்பியே முத்தங்கள் சோ்த்திட
கன்னங்கள் பாா்த்து நான் காத்திருப்பேன்



Writer(s): Hiphop Tamizha


Attention! N'hésitez pas à laisser des commentaires.