Radha Jayalakshmi - Thaaippal Koduthal paroles de chanson

paroles de chanson Thaaippal Koduthal - Radha Jayalakshmi




தாய்ப்பால் கொடுத்தாள் பராசக்தி
தனிக்கருணைத் தமிழ்ப் பால் கொடுத்தான் தமிழ் முருகன்
வாய்ப்பாயால் பாடும் பழந்தமிழில்
பாடத் தொடங்குகிறேன் ஆடும் மயில் வேலன் அருள்
தந்தைக்கு மந்திரத்தைச் சாற்றிப் பொருளுரைத்த
முந்து தமிழ் சக்தி மகன் முருகன் வந்தான்
தந்தைக்கு மந்திரத்தைச் சாற்றிப் பொருளுரைத்த
முந்து தமிழ் சக்தி மகன் முருகன் வந்தான்
பல் முளைக்கும் முன்னே எனக்குக் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்
ஆதிசக்தி நாயகியின் பாதிசக்தி ஆனவர்தம்
நீலிக்கண்ணிலே பிறந்த முருகன் வந்தான்
ஆதிசக்தி நாயகியின் பாதிசக்தி ஆனவர்தம்
நீலிக்கண்ணிலே பிறந்த முருகன் வந்தான்
கலைஞானக் கண் திறந்து வைத்து தமிழும் தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்
ஆங்கார சக்தி என்னும்
ஓங்காரத் தாமரைக்குள்
ரீங்காரம் செய்யும் வண்டு
கந்தன் வந்தான்
ஆங்கார சக்தி என்னும்
ஓங்காரத் தாமரைக்குள்
ரீங்காரம் செய்யும் வண்டு
கந்தன் வந்தான்
என்றும் நீங்காத செந்தமிழில் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்
வந்த கலி தீர்ந்ததென்று
கந்தர்கலி பாட வந்தேன்
சந்தமுள்ள நூறுகவிச் சரணம் தந்தேன்
வந்த கலி தீர்ந்ததென்று
கந்தர்கலி பாட வந்தேன்
சந்தமுள்ள நூறுகவிச் சரணம் தந்தேன்
அந்தக் கந்தனவன் தனது திருச்சரணம் தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்



Writer(s): Kannadhasan, K V Mahadevan



Attention! N'hésitez pas à laisser des commentaires.