S. P. Balasubrahmanyam feat. S. Janaki - Adukku Malli Yeduthu (From "Aavaram Poo") paroles de chanson

paroles de chanson Adukku Malli Yeduthu (From "Aavaram Poo") - S. P. Balasubrahmanyam , S. Janaki




அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை
அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை
அச்சாரம் அப்பன் தந்த முத்தாரம்
அதை அடகு வைக்காம காத்து வந்தேன் இந்நாளா
தள்ளி விலகி நிக்காம தாளம் தட்டு கண்ணாளா
அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை
வெற்றி மாலை போட்டானய்யா கெட்டிக்கார ராசா
முத்துப் போல கண்டான் அங்கே மொட்டுப் போல ரோசா
சொந்தம் இங்கே வந்தாளுன்னு சொன்னான் அவன் லேசா
காணததக் கண்டா அப்ப ஆனானய்யா பாசா
என்னாச்சு இந்த மனம் பொன்னாச்சு
அட எப்போதோ ரெண்டு மட்டும் ஒண்ணாச்சு
அட வாய்யா மச்சானே யோகம் இப்போ வந்தாச்சு
அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை
மெட்டுப் போடும் செந்தாழம்பூ கெட்டிமேளம் போட
எட்டிப் பாக்கும் ஆவாரம்பூ வெக்கத்தோடு ஓட
அக்கம் பக்கம் சொல்லாமத்தான் உள்ளுக்குள்ளே வாட
சுத்தும் மனம் நில்லாமத்தான் கெட்டானய்யா கூட
சந்தோஷம் தங்கத்துக்கு சந்தோஷம்
இப்போதும் கிட்டவரும் எப்போதும்
அட வாய்யா ராசாவே அய்யா இப்ப ஒன் நேரம்
அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை
அச்சாரம் அப்பத் தந்த முத்தாரம்
அதை அடகு வைக்காம காத்து வந்தேன் இந்நாளா
தள்ளி வெலகி நிக்காம தாளம் தட்டு கண்ணாளா
அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை




Attention! N'hésitez pas à laisser des commentaires.
//}