S. P. Balasubrahmanyam - Samsaram Enbathu - From "Mayangugiral Oru Maadhu" paroles de chanson

paroles de chanson Samsaram Enbathu - From "Mayangugiral Oru Maadhu" - S. P. Balasubrahmanyam




சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை மனம் குணம் ஒன்றான முல்லை
சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை மனம் குணம் ஒன்றான முல்லை
என் வாழ்க்கை திறந்த ஏடு அது ஆசையின் கிளியின் கூடு
என் வாழ்க்கை திறந்த ஏடு அது ஆசையின் கிளியின் கூடு
பல காதல் கவிதை பாடி பரிமாறும் உண்மைகள் கோடி
இதுபோன்ற ஜோடியில்லை இதுபோன்ற ஜோடியில்லை
மனம் குணம் ஒன்றான முல்லை
சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை மனம் குணம் ஒன்றான முல்லை
என் மாடம் விளக்கு ஒரு நாளும் இல்லை இருட்டு
என் மாடம் விளக்கு ஒரு நாளும் இல்லை இருட்டு
என் உள்ளம் போட்ட கணக்கு ஒரு போதும் இல்லை வழக்கு
இதுபோன்ற ஜோடி இல்லை இதுபோன்ற ஜோடி இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை
சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை மனம் குணம் ஒன்றான முல்லை
தை மாத மேக நடனம் என் தேவி காதல் நளினம்
தை மாத மேக நடனம் என் தேவி காதல் நளினம்
இந்த காதல் ராணி மனது அது காலம் தோறும் எனது
இதில் மூடும் திரைகள் இல்லை இதில் மூடும் திரைகள் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை
சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை மனம் குணம் ஒன்றான முல்லை



Writer(s): VIJAYA BHASKAR, KANNADHASAN


Attention! N'hésitez pas à laisser des commentaires.