S. P. Balasubrahmanyam - Thanga Thamari Magale paroles de chanson

paroles de chanson Thanga Thamari Magale - S. P. Balasubrahmanyam




தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
தங்கத் தாமரை மகளே வா அருகே
தங்கத் தாமரை மகளே இள மகளே வா அருகே
செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே
என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே
வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே
உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே
காணாமல் நான் போனேனே
இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க
தொடட்டுமா தொல்லை நீக்க
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
பிரிந்திருக்கும் உயிரை எல்லாம்
பிணைத்து வைக்கும் கார்காலம்
நகம் கடிக்கும் பெண்ணே அடக்காத ஆசை
நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை
நெருக்கமே காதல் பாஷை
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
தங்கத் தாமரை மகளே
தத்தித் தாவுது மனமே
தங்கத் தாமரை மகளே
தத்தித் தாவுது மனமே வா



Writer(s): a. r. rahman


Attention! N'hésitez pas à laisser des commentaires.
//}