S. P. Balasubrahmanyam - Uzhaippaliyum Naane paroles de chanson

paroles de chanson Uzhaippaliyum Naane - S. P. Balasubrahmanyam



உழைப்பாளியும் நானே முதலாளியும் நானே
தமிழ் அழகனும் நானே தமிழ் அரசனும் நானே
நான் போடாத வேஷமில்லை பாடாத பாடல் இல்லை
ஆனாலும் மானே என் அன்பு மனம் மாறவில்லை
ஒரு கோல கிளி ஜோடி தன்னை கூடுது கூடுது மானே
ஒரு கோல கிளி ஜோடி தன்னை கூடுது கூடுது மானே
அது திக்கும் கண்டு தெசையும் கண்டு வந்தது வந்தது தானே
ஒரு சோல குயில் ஜோடி தன்ன கூடுது கூடுது வந்து
அது நெஞ்சம் தொட்டு நெனைப்பும் தொட்டு பாடுது பாடுது சிந்து
கிட்ட வருமோ ஒட்ட வருமோ கொள்ளை அழகை கொட்டி தருமோ
ஒரு சோல குயில் ஜோடி தன்ன கூடுது கூடுது வந்து
அது நெஞ்சம் தொட்டு நெனைப்பும் தொட்டு பாடுது பாடுது சிந்து
இவன் ரெட்டை வேஷம் கட்டி வந்த ஆள் தானடி
ஒரு மன்னவனும் சின்னவனும் நான் தானடி
அன்பு தொல்லை தந்த பிள்ளை செய்த வித்தை ஆயிரம்
அதை ஒத்துகொண்டால் ஒட்டி கொண்டால் வண்ண பூச்சரம்
புன்னகை சிந்துகின்ற பொன்மகள் முத்து முகம்
எப்பவும் என் வசத்தில் வந்திடும் சொத்து சுகம்
இப்ப வரவோ எப்ப வரவோ பள்ளியறையில் அள்ளி தரவோ
ஒரு கோல கிளி ஜோடி தன்னை கூடுது கூடுது மானே
அது திக்கும் கண்டு தெசையும் கண்டு வந்தது வந்தது தானே
அந்தி வெயில் வந்து மையல் தந்து நான் வாடினேன்
படும் துன்பமெல்லாம் தென்றலிடம் நான் கூறினேன்
அந்த தென்றல் பெண்ணும் சொன்னாலம்மா உந்தன் சேதியே
அவள் சொன்ன பின்பு மின்னல் போல வந்தேன் தேடியே
என்ன நீ தொட்டவுடன் என்னவோ பண்ணுதையா
முற்றுகை இட்டவுடன் சிற்றிடை பிண்ணுதையா
வெட்கமிடுமோ அச்சமிடமோ தக்கதுணை தான் பக்கம் வருமோ
ஒரு சோல குயில் ஜோடி தன்ன கூடுது கூடுது வந்து
அது நெஞ்சம் தொட்டு நெனைப்பும் தொட்டு பாடுது பாடுது சிந்து
கிட்ட வருமோ ஓட்ட வருமோ கொள்ளை அழகை கொட்டி தருமோ
ஒரு கோல கிளி ஜோடி தன்னை கூடுது கூடுது மானே
அது திக்கும் கண்டு தெசையும் கண்டு வந்தது வந்தது தானே



Writer(s): Vali


S. P. Balasubrahmanyam - Uzhaippali
Album Uzhaippali
date de sortie
01-01-1993




Attention! N'hésitez pas à laisser des commentaires.