S. P. Balasubrahmanyam - Yenna Azhago (From "Love Today") paroles de chanson

paroles de chanson Yenna Azhago (From "Love Today") - S. P. Balasubrahmanyam




என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கொத்திய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே
எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில் மனசை தைத்தாள்
சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள்
நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன்
நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்து விட்டேன்
என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
அன்பே உன் ஒற்றை பார்வை அதை தானே யாசிதேன்
கிடையாதென்றால் கிளியே என் உயிர் போக யோசித்தேன்
நான்கு ஆண்டு தூக்கம் கெட்டு இன்று உன்னை சந்தித்தேன்
காற்றும் கடலும் நிலவும் அடி தீ கூட தித்தித்தேன்
மாணிக்க தேரே உன்னை மலர் கொண்டு பூசிதேன்
என்னை நான் கில்லி இது நிஜம் தானா சோதித்தேன்
இது போதுமே இது போதுமே
இனி என் கால்கள் வான் தொடுமே
என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
நான் கொண்ட ஆசை எல்லாம் நான்காண்டு ஆசைதான்
உறங்கும்போதும் ஒலிக்கும் அடி உன் கொலுசின் ஓசைதான்
நீ வீசும் பார்வை இல்லை நெருப்பாச்சு நெஞ்சம் தான்
வலியின் கொடுமை ஒழிய அடி தமிழ் வார்த்தை கொஞ்சம் தான்
இன்றே தான் பெண்ணே உன் முழு பார்வை நான் கண்டேன்
கை தொட்ட நேரம் என் முதல் மோட்சம் நான் கொண்டேன்
மஹா ராணியே மலர் வாணியே இனி என் ஆவி உன் ஆவியே
என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கொத்திய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே
எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில் மனசை தைத்தாள்
சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள்
நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன்
நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்து விட்டேன்
என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே



Writer(s): Siva C, K Vairamuthu


Attention! N'hésitez pas à laisser des commentaires.