Sreenivas feat. Sujatha - Oru Poiyavathu (From "Jodi") paroles de chanson

paroles de chanson Oru Poiyavathu (From "Jodi") - Sujatha , Sreenivas




ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
பூக்களில் உன்னால் சத்தம்
அடி மௌனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான்
ரொம்ப பக்கம் பக்கம்தான்
பார்த்தால் ரெண்டும் ஒன்றுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான்
பார்க்கும் கண்கள் ஒன்றுதான்
உண்டால் ரெண்டும் வேறுதான்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
இரவினை திரட்டி...
இரவினை திரட்டி
கண்மணியின் குரல் செய்தானோ
கண்மணியின் குரல் செய்தானோ
நிலவின் ஒளி எடுத்து கண்கள் செய்தானோ
விண்மீன் விண்மீன் கொண்டு
விரலில் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு
கை ரேகை செய்தானோ
வாடை காற்று பட்டு
வயதுக்கு வந்த பூக்கள்
கொண்டு தங்கம் தங்கம் பூசி தோள் செய்தானோ
ஆனால் பெண்ணே
உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே
உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே
அருகில் காட்டியது நீதானே
மலரின் முகவரிகள் சொன்னதும் நீதானே
ஆஹ்... காற்று பூமி வானம்
காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் யார்
என் அன்பே நீதானே
கங்கை கங்கை ஆற்றை
கவிதைகள் கொண்டு தரும்
காவிரி ஊற்றை கண்ணில்
கையில் தந்தவள் நீதானே
ஆனால் உயிரே
நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயே
கானல் நீரே
நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயே
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான்தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
பூக்களில் உன்னால் சத்தம்
அட மௌனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
தாங்குமா என் நெஞ்சம்



Writer(s): a. r. rahman



Attention! N'hésitez pas à laisser des commentaires.