Vijay Yesudas - Devathaye Va Va paroles de chanson

paroles de chanson Devathaye Va Va - Vijay Yesudas




தேவதையே வா வா என் தேவதையே வா வா
உன் இருவிழி அசைவுகள் எழுதிடும் கவிதை நான்
பூமழையே வா வா என் பூமழையே வா வா
உன் விரல்தொடும் தொலைவினில் விழுகிற அருவி நான்
நீரில்லாமல் மீன்களும் வேரில்லாமல் பூக்களும்
பாவம் தானே பூமியில்
சிலுவைளும் சிறகெனப் பறந்திடு
தேவதையே வா வா என் தேவதையே வா வா
உன் இருவிழி அசைவுகள் எழுதிடும் கவிதை நான்
விளையும் பூமி தண்ணீரை விலகச் சொல்லாது
அலைகடல் சென்று பாயாமல் நதிகள் ஓயாது
சிதைவுகள் இல்லை என்றாலே சிலைகள் இங்கேது
வருவதை எல்லாம் ஏற்காமல் போனால் வாழ்வேது
பாதை தேடும் கால்கள் தான் ஊரைச் சேரும்
குழலை சேரும் தென்றல் தான் கீதமாகும்
சுற்றும் இந்த பூமியை சுழலச் செய்யும் காதலை
கற்றுக் கொண்டேன் உன்னிடம்
இருவரும் இனி ஒரு உயிர் பிரிவில்லை
அடைமழை நம்மைத் தொட்டாலே வெயிலே வாவென்போம்
அனலாய் வெயில் சுட்டாலே மழையே தூவென்போம்
தனிமைகள் தொல்லை தந்தாலே துணையைக் கேட்கின்றோம்
துணைவரும் நெஞ்சைக் கொள்ளாமல் தனியே தேய்கின்றோம்
ஆசை மட்டும் இல்லையேல் ஏது நாட்கள்
கைகள் தொட்டு சூடவே காதல் பூக்கள்
கண்ணை விற்று ஓவியம் வாங்கும் இந்த ஊரிலே
அன்பை வைத்து வாழலாம்
சுகமென தினம் சுமைகளில் மகிழ்ந்திரு
தேவதையே வா வா என் தேவதையே வா வா
உன் இருவிழி அசைவுகள் எழுதிடும் கவிதை நான்
பூமழையே வா வா என் பூமழையே வா வா
உன் விரல்தொடும் தொலைவினில் விழுகிற அருவி நான்
நீரில்லாமல் மீன்களும் வேரில்லாமல் பூக்களும்
பாவம் தானே பூமியில்
சிலுவைளும் சிறகெனப் பறந்திடு



Writer(s): Yugabarathi


Attention! N'hésitez pas à laisser des commentaires.
//}