Anuradha Sriram - Anbendru Mazhaieley Agilangal текст песни

Текст песни Anbendru Mazhaieley Agilangal - Anuradha Sriram



அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
விண்மீங்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை சென்னீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
(அதிரூபன் தோன்றினானே)
போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே
புகழ்மைந்தன் தோன்றினானே
(புகழ்மைந்தன் தோன்றினானே)
கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும்
கருணைமகன் தோன்றினானே
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே(அதிரூபன் தோன்றினானே)
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே(வந்தவன் மின்னினானே)
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே(அதிரூபன் தோன்றினானே)
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே(வந்தவன் மின்னினானே)



Авторы: a. r. rahman


Anuradha Sriram - Minsara Kanavu (Orignal Motion Picture Soundtrack)
Альбом Minsara Kanavu (Orignal Motion Picture Soundtrack)
дата релиза
01-01-1997




Внимание! Не стесняйтесь оставлять отзывы.