Harris Jayaraj feat. Hariharan, Shweta Mohan & Chinmayi - Amali Thumali (From "KO") текст песни

Текст песни Amali Thumali (From "KO") - Hariharan , Harris Jayaraj , Shweta Mohan , Chinmayi Sripada




அமளி துமளி நெளியும் valley
எனை கவ்விக் கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
எனை அள்ளிச் சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
குளிர்க்காற்றும் வீசுதே
ரோஜாப்பூவும்
அடி முள்ளில் பூக்கும் என அறிவேனே
பேனா முள்ளில்
இந்த பூவும் பூத்ததொரு மாயம்
மாறி மாறி
உன்னைப் பார்க்க சொல்லி விழி கெஞ்சும்
எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு
காதல் பொங்கி வருதே
அமளி துமளி நெளியும் valley
எனை கவ்விக் கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
எனை அள்ளிச் சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
குளிர்க்காற்றும் வீசுதே
வா என சொல்லவும் தயக்கம்
மனம் போ என தள்ளவும் மறுக்கும்
இங்கு காதலின் பாதையில் அனைத்தும்
அட பெரும் குழப்பம்
ஆறுகள் அருகினில் இருந்தும்
அடைமழை அது சோவென பொழிந்தும்
அடி நீ மட்டும் தூரத்தில் இருந்தால்
நா வரண்டும் விடும்
ஹே கூவா கூவா கூவா கூவா குயிலேது
ஹே தவ்வா தவ்வா தவ்வா தவ்வா மனமேது
முதல்மழை நனைத்ததைப் போலே
முதல் புகழ் அடந்ததைப் போலே
குதிக்கிறேன் குதிக்கிறேன் மேலே ஆருயிரே
எனக்குனை கொடுத்தது போதும்
தரைத்தொட மறுக்குது பாதம்
எனக்கினி உறக்கமும் தூரம் தேவதையே
அமளி துமளி நெளியும் valley
எனை கவ்விக் கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
எனை அள்ளிச் சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
குளிர்க்காற்றும் வீசுதே
கால்களில் ஆடிடும் கொலுசு
அதன் ஓசைகள் பூமிக்கு புதுசு
அதை காதுகள் கேட்டிடும் பொழுது
நான் கவியரசு
மேற்கிலும் சூரியன் உதிக்கும்
நீர் மின்மினி சூட்டிலும் கொதிக்கும்
அட அருகினில் நீ உள்ள வரைக்கும்
மிக மண மணக்கும்
ஹே பூவா பூவா பூவா பூவா சிரிப்பாலே
ஹே அவ்வா அவ்வா அவ்வா அவ்வா தீர்த்தாயே
ஹே சூடாமலே அணிகலன் இல்லை
தொடாமலே உடல் பலன் இல்லை
விடாமலே மனதினில் தொல்லை காதலியே
தொடத் தொட இனித்தடை இல்லை
இடைவெளி மிகப்பெரும் தொல்லை
அடையலாம் மகிழ்ச்சியின் எல்லை கூடலிலே
அமளி துமளி நெளியும் valley
எனை கவ்விக் கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
எனை அள்ளிச் சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
குளிர்க்காற்றும் வீசுதே
ரோஜாப்பூவும்
அடி முள்ளில் பூக்கும் என அறிவேனே
பேனா முள்ளில்
இந்த பூவும் பூத்ததொரு மாயம்
மாறி மாறி
உன்னைப் பார்க்க சொல்லி விழி கெஞ்சும்
எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு
காதல் பொங்கி வருதே



Авторы: J HARRIS JAYARAJ, VIVEKA


Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}