S. P. Balasubrahmanyam - Mazhai Kaalam Megam Ondru текст песни

Текст песни Mazhai Kaalam Megam Ondru - S. P. Balasubrahmanyam



ஆ: மழைக் கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகத் தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது (2)
பெ: இத்தனை காலம் சித்திரப் பெண்ணை பார்வை தேடியது
ஒரு பாடல் பாடியது அதில் ஊடல் கூடியது
பெ: மீட்டாத வீணையின் மெல்லிய தேகம்
நீ தொட்ட வேளையில் மோகன ராகம் (2)
ஆ: விரல் வழி பிறந்தது உடல் வழி கலந்தது
தலைமுதல் கால்வரை சிலிர்த்திடத்தான்
பெ: பூவை நானும் பூவல்ல பூப்போல நீ கிள்ள
ஆ: எனக்கென இருப்பது எதற்கதை மறைப்பது
பெ: மழைக் கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சல் ஆடியது
ஆ: இதற்காகத் தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது
ஆ: ஆஹா என் தோள்களில் மாங்கனி சாய
ஆகாய கங்கை என் மார்பினில் பாய (2)
பெ: கொதித்தது குளிர்ந்தது குளிர்ந்தது வளர்ந்தது
நடந்ததை மறந்திடு உனக்கினி நான்
ஆ: காமன் பாடும் சங்கீதம் காலத்தின் சந்தோஷம்
பெ: தொடத் தொடத் தொடர்ந்தது
கொடியெனப் படர்ந்தது
ஆ: மழைக் கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகத் தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது
பெ: இத்தனை காலம் சித்திரப் பெண்ணை
பார்வை தேடியது
ஆ: ஆ... ஒரு பாடல் பாடியது
அதில் ஊடல் கூடியது.



Авторы: Vaali, Amaren Gangai


S. P. Balasubrahmanyam - Vazhve Maayam (Original Motion Picture Soundtrack)
Альбом Vazhve Maayam (Original Motion Picture Soundtrack)
дата релиза
01-01-1982




Внимание! Не стесняйтесь оставлять отзывы.