Santhosh Narayanan - Kadhal Kappal текст песни

Текст песни Kadhal Kappal - Santhosh Narayanan




கண்ணக் காட்டி மொரைச்சா
ஒத்தவாட்டி சிரிச்சா போதும்
சொச்ச காலம் இனிக்கும்
பச்ச வாழை துளிர்க்கும் நேரம்
ஒன்னாலத்தானே மழை மேகம் பெய்யும்
இல்லாமப் போனா என்ன செய்ய
சொல்லாமப் போகும் உன்னோட மௌனம்
சில்லாகப் பேத்து என்னக் கொல்ல
ஏன் கண்ணே நெறுப்பா கோபம்
அட நீ என்ன வெறுத்தா பாவம்
என் வாழ்க்கை முழுக்க நீ வந்தா மினுக்கும்
காதல் கப்பல் ஏறி இனி போவோமா
காலம் காலம் மாறும்
காதல் சாயம் ஊறும்
காலம் காலம் மாறும்
காதல் சாயம் ஊறும்
மொத்தமாக எனக்கு உன்னத்தானே பிடிக்கும் மோகம்
உன்னத்தேடித் துடிக்க இரத்த நாடி வெடிச்சித்தாவும்
மல்லுக்கு வேணாம் மனசிங்கு சேர
மன்னிச்சுப் போனா தப்பு இல்ல
பல்லக்குத் தூக்கும் வரம் ஒன்னுக் கேட்டேன்
நீதானே ராணி நெஞ்சுக்குள்ள
ஏன் கண்ணே நெறுப்பா கோபம்
அட நீ என்ன வெறுத்தா பாவம்
என் வாழ்க்கை முழுக்க நீ வந்தா மினுக்கும்
காதல் கப்பல் ஏறி இனி போவோமா
கொத்துக்கொத்தா அழக பொத்தி வச்சா வழியும்
அங்கதானே ரதியா நீ இருப்ப
நித்தம் ஒன்னில் கலந்து நித்திரையும் மரந்து
அன்பு கொண்ட நதியில் நான் மிதப்பேன்
ஹே ஒன்னாலத்தானே மழ மேகம் பெய்யும்
இல்லாமப் போனா என்ன செய்ய
பல்லக்குத் தூக்கும் வரம் ஒன்னு கேட்டேன்
நீ தானே ராணி நெஞ்சுக்குள்ள
ஏன் கண்ணே நெறுப்பா கோபம்
அட நீ என்ன வெறுத்தா பாவம்
என் வாழ்க்கை முழுக்க நீ வந்தா மினுக்கும்
காதல் கப்பல் ஏறி இனி போவோமா
காலம் காலம் மாறும்
காதல் சாயம் ஊறும்
காலம் காலம் மாறும்
காதல் சாயம் ஊறும்



Авторы: Santhosh Narayanan, Muthamil


Внимание! Не стесняйтесь оставлять отзывы.