Shreya Ghoshal & Ganesh Ragavendra - Kandaen Kanmaniyae (From "Renigunta") текст песни

Текст песни Kandaen Kanmaniyae (From "Renigunta") - Shreya Ghoshal & Ganesh Ragavendra




கண்ணே கண்மணியே
கருகும் மின்மினியே
காலம் மாறிவிடும் கலங்காதே
ஜன்னல் திறந்து வைத்தால்
காற்றில் வெளிச்சம் வரும்
காயம் ஆறிவிடும் வருந்தாதே
விழியில் விழியில்
கண்ணீர் ஏன் வந்தது
இதயம் எரிந்து இமயம் அழுகின்றது
நூலிலே ஆடிடும் பொம்மைகள் நாமடா
கனவுகள் காண்பதே வீண்டா
ஏழைகள் எந்த நாளுமே
மனதோடு ஆசைகள் வளர்ப்பதும்
அதன் வழி நடப்பதும் தவறில்லை
ஆயினும் அவையாவுமே
விதி கேட்கும் கேள்விக்கு
விடை சொல்ல வழியின்றி
கலைந்திடும் வழிப்பாதைகள்
இளமைக்காலம் அழகிய காலம்
இவளுக்கு கிடைக்கவில்லை
பருந்துகள் துறத்தும் வானத்தில்
வண்ணத்துப்பூச்சிக்கு இடமுமில்லை
வானவில் இவன் வானவில்
விழி பார்த்திடும் நேரத்தில்
பாதியில் கரைவதும் ஏன்
நூலிலே ஆடிடும் பொம்மைகள் நாமடா
கனவுகள் காண்பதே வீணடா
காதலும் அலைபோலவே
கரைதாண்டிட வழியின்றி
திரும்பிட மனமின்றி
நுரையுடன் அலைந்திடுமே
ஊமையின் கனவாகவே
வெளியேறவும் வழியின்றி
உரைத்திட மொழியின்றி
உயிருடன் இறந்திடுமே
இதயம் என்பது சத்தியமாக
இறைவனுக்கில்லையடா
இதயம் மட்டும் அவனுக்கு இருந்தால்
துன்பங்கள் இல்லையடா
வேதனை தினம் வேதனை
நதி தேங்கிடும் வேளையில்
தொனிகள் போவதெங்கே
நூலிலே ஆடிடும் பொம்மைகள் நாமடா
கனவுகள் காண்பதே வீண்டா



Авторы: GANESH RAGHAVENDRAN, NA. MUTHUKUMAR



Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}