T. M. Soundararajan - Manimudi Oraaru текст песни

Текст песни Manimudi Oraaru - T. M. Soundararajan



மணிமுடி ஓராறு
இசைபல்லவி
மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு
பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி
வரும் பக்தர்கள் தொகை பல நூறு கோடி (இசை)
மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு
பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி
வரும் பக்தர்கள் தொகை பல நூறு கோடி
இசைசரணம் - 1
சிவனுக்கு ஐந்தெழுத்து செல்வனுக்கு ஆறெழுத்து
சிவனுக்கு ஐந்தெழுத்து செல்வனுக்கு ஆறெழுத்து
அவனுக்கு அருள் தரச் செல்லும் போது
உன் பவனியை விளக்கிடப் பாடல் ஏது
மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு
பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி
வரும் பக்தர்கள் தொகை பல நூறு கோடி
இசைசரணம் - 2
கயிலையில் தாய் இருக்க கண் முன்னே நீ இருக்க
கயிலையில் தாய் இருக்க கண் முன்னே நீ இருக்க
மயிலுடன் உலவிடும் ஆறு வீடு
உன் மனந்தனில் தொண்டர்க்குக் கோடி வீடு
மனந்தனில் தொண்டர்க்குக் கோடி வீடு
மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு
பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி
வரும் பக்தர்கள் தொகை பல நூறு கோடி
இசைசரணம் - 3
கணபதி தலை வாசல் கந்தனுக்கு மலை வாசல்
கணபதி தலை வாசல் கந்தனுக்கு மலை வாசல்
துணைவியர் இருபுறம் உன்னைச் சேர
உடன் தொண்டர்கள் பல்லாண்டு வாழ்த்துக் கூற
தொண்டர்கள் பல்லாண்டு வாழ்த்துக் கூற
மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு
பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி
வரும் பக்தர்கள் தொகை பல நூறு கோடி (இசை)



Авторы: T. M. SOUNDERARAJAN, TAMIL NAMBI


T. M. Soundararajan - Muruga
Альбом Muruga
дата релиза
01-01-2011




Внимание! Не стесняйтесь оставлять отзывы.