T. M. Soundararajan - Kaatru Vaanga (From "Kalangarai Vilakkam") текст песни

Текст песни Kaatru Vaanga (From "Kalangarai Vilakkam") - T. M. Soundararajan




காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
நான் காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்
நான் காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை
என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை
என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவம் என்ற ஓடை
என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவம் என்ற ஓடை
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்
நான் காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
நடை பழகும்போது தென்றல் விடை சொல்லிக்கொண்டு போகும்
நடை பழகும்போது தென்றல் விடை சொல்லிக்கொண்டு போகும்
அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்
அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்
அவள் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்
நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை
நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை
கொஞ்சம் விலகி நின்ற போதும் இந்த இதயம் தாங்கவில்லை
கொஞ்சம் விலகி நின்ற போதும் இந்த இதயம் தாங்கவில்லை
காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்னவானாள்
நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்…
அன்பு கிருஷ்ணா



Авторы: VAALEE, M.S. VISWANATHAN, VISWANATHAN M S


Внимание! Не стесняйтесь оставлять отзывы.