T. M. Soundararajan - Yetramunna (From "Arasilangkumari") текст песни

Текст песни Yetramunna (From "Arasilangkumari") - T. M. Soundararajan




ஏற்றமுன்னா ஏற்றம்
இதிலே இருக்குது முன்னேற்றம்
எல்லாரும் பாடுபட்டா
இது இன்பம் விளையும் தோட்டம்
எல்லாரும் பாடுபட்டா
இது இன்பம் விளையும் தோட்டம்
கிணற்று நீரை நிலத்துக்கு தான் எடுத்து தரும் ஏற்றம்
கிளைவெடிக்கும் பயிர்களுக்கு உயர்வளிக்கும் ஊட்டம்
தந்தனத் தானே ஏலேலோ
தந்தனத் தானே ஏலேலோ
எறும்பு போல வரிசையாக
எதிலும் சேர்ந்து உழைக்கணும்
இடுப்பே வளையா மனிதர்
எதிர் பார்த்து பொழைக்கணும்
நம்மை எதிர் பார்த்து பொழைக்கணும்
உடும்பு போல உறுதிவேணும்
ஓணான் நிலைமை திருந்தணும்
உடைஞ்சு போன நமது இனம்
ஒன்னா வந்து பொருந்தனும்
தந்தனத் தானே ஏலேலோ
தந்தனத் தானே ஏலேலோ
ஓதுவார் தொழுவாரெல்லாம் உழுவார் தலைக்கடையிலே
உலகம் செழிப்பதெல்லாம் ஏர் நடக்கும் நடையிலே
ஆதிமகள் ஒளவை சொல்லை அலசி பாத்தா மனசிலே
ஆதிமகள் ஒளவை சொல்லை அலசி பாத்தா மனசிலே
நீதிஎன்ற நெல் விளையும்
நெருஞ்சி படர்ந்த தரிசிலே
போடு தந்தனத் தானே ஏலேலோ
தந்தனத் தானே ஏலேலோ
விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும்
வீணரெல்லாம் மாறனும்
வேலை செஞ்சா உயர்வோமென்ற
விபரம் மண்டையில் ஏறனும்
விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும்
வீணரெல்லாம் மாறனும்
வேலை செஞ்சா உயர்வோமென்ற
விபரம் மண்டையில் ஏறனும்
நிதியை எண்ணும் பெரியவங்க
நெஞ்சில் அன்பும் சேரனும்
நிரந்தரமா சகலருமே சுதந்திரமா வாழனும்
தந்தனத் தானே ஏலேலோ
தந்தனத் தானே ஏலேலோ
தந்தனத் தானே ஏலேலோ
தந்தனத் தானே ஏலேலோ



Авторы: Pattukkottai Kalyanasundaram, G Ramanathan



Внимание! Не стесняйтесь оставлять отзывы.