A. R. Rahman - Kulliruthu Kulliruthu (From "Taj Mahal") текст песни

Текст песни Kulliruthu Kulliruthu (From "Taj Mahal") - Unnikrishnan, Swarnalatha



குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
கடலிலே தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலின் உறவுகள் எரிவதில்லை
குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
இதயத்தில் வலி ஒன்று வருது
உன் இமைகளை மூடிக் கொண்டு தடவு
நெஞ்சிக்குள்ளும் எரியுது நெருப்பு
இதை நீர் கொண்டு அணைப்பது உன் பொறுப்பு
இது தண்ணீர் ஊற்றியா தீரும்
நான் பன்னீர் ஊற்றினால் மாறும்
தேகங்கள் பரிமாற நம் உள்ளங்கள் இடமாறும்
பேரின்ப பூசைகளே உன் பெண்மைக்கு பரிஹாரம்
மழை இல்லாமலும் தென்றல் சொல்லாமலும்
நம் நெஞ்சுக்குள் இப்போது லட்சம் பூ மலரும்
குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
நெஞ்சுக்குழி விட்டு விட்டு துடிக்கும்
அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம்
முகத்துக்கும் முகத்துக்கும் சண்டையா
அட முத்தமிட வேறு இடம் இல்லையா
மழைத்துளி மழைத்துளி தொல்லையா
அட ஆடை மழை காக்க எண்ணம் இல்லையா
சுற்றி எல்லாம் எரிகின்ற போதும் நாம் இன்பம் கொள்வது தீது
அடி பூகம்ப வேளையிலும் இரு வான் கோழி கலவிக்கொள்ளும்
தேகத்தை அணைத்து விடு சுடும் தீகூட அணைந்துவிடும்
அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்
சுற்றி நின்றாடும் தீவண்ணம் அணிவது திண்ணம்
குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
கடல் அலை தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலின் உறவுகள் எரிவதில்லை



Авторы: a. r. rahman



Внимание! Не стесняйтесь оставлять отзывы.