Anirudh Ravichander feat. Neeti Mohan - Neeyum Naanum Lyrics

Lyrics Neeyum Naanum - Anirudh Ravichander feat. Neeti Mohan




நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீளம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போக்கில்
தூறல் கொஞ்சம் தூறுமே
என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளிபோகட்டும்
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும்
நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில்
உன் குடை அழகு
நான் பகல் இரவு(கத்தாழ முல்ல முல்ல,கொத்தோடு கிள்ள கிள்ள)
நீ கதிர் நிலவு(கொலையோடு அள்ள அள்ள வந்தபுள்ள)
என் உறக்கங்களில்(முந்தான துள்ள துள்ள முகராசி என்ன சொல்ல)
நீ முதல் கனவு(முத்தத்தால் என்ன கொல்ல வந்தபுள்ள)
நீ வேண்டுமே
எந்த நிலையிலும் எனகென
நீ போதுமே
ஒளி இல்லா உலகத்தில்
இசையாக நீயே மாறி
காற்றில் வீசினாய்
காதில் பேசினாய்
மொழி இல்லா மௌனத்தில்
விழியாலே வார்த்தை கோர்த்து
கண்ணால் பேசினாய்
கண்ணால் பேசினாய்
நூறு ஆண்டு உன்னோடு
வாழ வேண்டும் மண்ணோடு
பெண் உனை தேடும் எந்தன் வீடு
நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில்
உன் குடை அழகு
நான் பகல் இரவு(கத்தாழ முல்ல முல்ல,கொத்தோடு கிள்ள கிள்ள)
நீ கதிர் நிலவு(கொலையோடு அள்ள அள்ள வந்தபுள்ள)
என் உறக்கங்களில்(முந்தான துள்ள துள்ள முகராசி என்ன சொல்ல)
நீ முதல் கனவு(முத்தத்தால் என்ன கொல்ல வந்தபுள்ள)
நீ வேண்டுமே
இந்த பிறவியை கடந்திட
நீ போதுமே
கத்தாழ முல்ல முல்ல, கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள வந்தபுள்ள
முந்தான துள்ள துள்ள முகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல வந்தபுள்ள
கத்தாழ முல்ல முல்ல, கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள வந்தபுள்ள
முந்தான துள்ள துள்ள முகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல வந்தபுள்ள
கத்தாழ முல்ல முல்ல, கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள வந்தபுள்ள
முந்தான துள்ள துள்ள முகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல வந்தபுள்ள



Writer(s): Madhan Karky



Attention! Feel free to leave feedback.