Lyrics Poojaikku Vantha - From "Pathakannikkai" - S. Janaki , P. B. Sreenivas
பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
ஓ ஓ ஓ ஓ ஓ ...
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனிச் சிலையே வா
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
ஓ ஓ ஓ ஓ ஓ ...
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா
கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஓ ஓ ஓ ஓ ஓ ...
கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஆடை கட்டிய ரதமே ரதமே
அருகில் அருகில் நான் வரவா
அருகில் வந்தது உருகி நின்றது
உறவு தந்தது முதலிரவு
இருவர் காணவும் ஒருவராகவும்
இரவில் வந்தது வெண்ணிலவு
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா
பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனிச் சிலையே வா
செக்கச் சிவந்த இதழோ இதழோ
பவளம் பவளம் செம்பவளம்
தேனில் ஊறிய மொழியில் மொழியில்
மலரும் மலரும் பூமலரும்
எண்ணி வந்தது கண்ணில் நின்றது
என்னை வென்றது உன் முகமே
இன்ப பூமியில் அன்பு மேடையில்
என்றும் காதலர் காவியமே
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா
பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனிச் சிலையே வா

Attention! Feel free to leave feedback.